04th May 2026 18:08:51 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு விழா 2026 கொமாண்டோ படையணி தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற்றது.
படையணியின் முன்னாள் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ (ஓய்வு) மற்றும் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன ஆகியோர் பிரதம விருந்தினர்களாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில், அனைத்து வயதினரும் பங்கேற்று மகிழ்வதை ஊக்குவிக்கும் வகையில், பலவிதமான பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள் இடம்பெற்றன.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கொமாண்டோ படையணியின் 119 சிவில் ஊழியர்களுக்கு ஆடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சிறப்புப் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து பிள்ளைகளுக்கும் புத்தாண்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரதித் தளபதியும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எச்.டி.எல்.எஸ். பெரேரா ஆர்டபிளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி ரந்திமா பெரேரா, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.