04th May 2026 17:44:06 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 76-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமா ஹெட்டிகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு 2026 ஏப்ரல் 29 ஆம் திகதி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தில் வவுசர்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடாத்தியது.
நிகழ்ச்சியின் போது, நாட்டில் நடைபெற்ற மனிதாபிமானப் பணிகளில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்பங்களுக்குப் வவுசர் பரிசில்கள் வழங்கப்பட்டன.