28th April 2026 06:35:08 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் இரண்டாம் காலாண்டு பொதுக்கூட்டம் 21 ஏப்ரல் 2026 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைப்பெற்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்கள் பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொண்டார். அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சேவை வனிதையர் பிரிவின் தலைவியர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பாடல் இசைக்கப்பட்டதுடன், உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் அடங்கிய ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர், சேவை வனிதையர் பிரிவின் தலைவி கூட்டத்தில் உரையாற்றியதுடன் மேலும் சேவை வனிதையர் பிரிவின் அரசியலமைப்பின்படி, நிர்வாகக் குழுவின் காலியாக உள்ள பதவிகளுக்கு பின்வரும் சிரேஷ்ட உறுப்பினர்களை நியமித்தார்.
பிரதி தலைவி – திருமதி தர்ஷனி யஹம்பத்
செயலாளர் – திருமதி விந்தியா பிரேமரத்ன
உதவிச் செயலாளர் – திருமதி உதரி அனுபமா கமகே
பொது ஒருங்கிணைப்பு அதிகாரி – திருமதி. சுமங்கலி பத்திரவிதான
பிரதி பொது ஒருங்கிணைப்பு அதிகாரி – திருமதி தமயந்தி பண்டாரநாயக்க
குழு திட்ட மேற்பார்வை அதிகாரி – திருமதி. ஸ்வேதா ஹேவகே
கடந்த வருடத்தின் சாதனைகள் குறித்து இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி. விந்தியா பிரேமரத்ன கடந்த வருடத்தின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்துடன் மேலும் கணக்காய்வு அறிக்கையை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர் மேஜர் ஏ.எஸ்.என் ஹதுருசின்ஹ அவர்கள் சமர்ப்பித்தார்.
அதன் பின்னர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நலன்புரி திட்டங்களை திறம்பட நிர்வகிப்பது மற்றும் போர்வீரர்களின் நலனுக்காக வருடாந்த நலன்புரி திட்டங்களைத் தொடர்வது குறித்து தலைவி வழிகாட்டுதல்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்தும், குழுப் படமும் எடுக்கப்பட்டதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைத்தலுடன் கூட்டம் நிறைவடைந்தது.
இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.