15th April 2026 21:35:02 Hours
இராணுவ சேவை வனிதைர் பிரிவின் தலைவி திருமதி. சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாலர் பாடசாலையின் பிள்ளைகளிடையே நடைமுறை மற்றும் அனுபவப்பூர்வமான கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில், இப்பலோகம, மின்னேரியா, மெனிங் டவுன், காலி, அனுராதபுரம், பல்லேகல, தியதலாவ மற்றும் பனாகொட ஆகிய இடங்களில் அமைந்துள்ள விரு கெகுளு பாலர் பாடசாலைகளில் 2026 மார்ச் 19 முதல் 31 வரை தொடர்ச்சியான சிறுவர் சந்தைகள் நடாத்தப்பட்டன.
இந்த நிகழ்வுகளின் போது, பிள்ளைகள் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களின் பாத்திரங்களை ஏற்று, மாதிரி சந்தை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். பழங்கள், காய்கறிகள், விளையாட்டு பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிமாற்றத்திற்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சி, பிள்ளைகளின் ஒரு ஈடுபாடு மிக்க மற்றும் ஊடாடும் கற்றல் சூழலில் நிதிப் பரிவர்த்தனைகள், பணத்தைக் கையாளுதல் மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றின் அடிப்படை அறிவைப் பெற உதவியது.