23rd March 2026 08:44:36 Hours
3 வது பொறியியல் சேவை படையணியின் 30வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2026 மார்ச் 11 அன்று முகாம் வளாகத்தில் ஒரு நன்கொடை வழங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட சிப்பாய்களின் குடும்பங்களின் கல்வித் தேவைகளுக்கு உதவும் வகையில், ரூ. 70,000.00 மதிப்புள்ள பாடசாலை உதவி பொருட்கள் பொதி வழங்கலே இந்த முயற்சியில் நோக்கமாகக் இருந்ததுடன் இந்தத் திட்டத்தின் மூலம் 10 மாணவர்கள் பயனடைந்தனர்.
இந்த நிகழ்ச்சி, 3 வது பொறியியல் சேவை படையணி கட்டளை அதிகாரியான மேஜர் எம்.பி.எஸ். நதீஷன் எல்.எஸ்.சி. அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.