19th March 2026 09:02:38 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினர் மற்றும் கொட்டாவ மெட்ரோ லயன்ஸ் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி ஷிஹானி அபேவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் “லொக்கா லெடவெல” என்ற மேடை நாடகம் 2026 மார்ச் 12 அன்று எல்பின்ஸ்டோன் தியேட்டரில் அரங்கேற்றப்பட்டது.
மிஹிந்து செத் மெதுர, ரணவிரு செவன மற்றும் கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் வசிக்கும் போர் வீரர்களுக்கு இந்த நிகழ்வு, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்கான ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கியது.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.