Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

17th March 2026 17:21:21 Hours

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையரினால் “சைபர் குற்றங்கள்” குறித்த விழிப்புணர்வு விரிவுரை

இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி யமுனா அபேகோன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் 2026 மார்ச் 14, அன்று “சைபர் குற்றங்கள்” குறித்த விழிப்புணர்வு விரிவுரையை நடத்தியது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பரிசோதகர் திரு. மலிஷ ஹேரத் இந்த விரிவுரையை நிகழ்த்தினார்.

மேலும், 21 வெற்றியாளர்கள் ஒரு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அவர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அனைத்து வருகையாளர்களுக்கும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் வாழ்க்கைத் துணைவியர்கள் கலந்து கொண்டனர்.