29th January 2026 09:42:49 Hours
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட நலன்புரி திட்டங்களின் மற்றொரு கட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் நலனை மேம்படுத்துவதோடு சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நிமித்தம், உடுப்பிலால, தெல்கொட பிரதேச வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் நன்கொடை வழங்கும் திட்டம் 2026 ஜனவரி 27 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் இது சமூக சுகாதார சேவைகளை ஆதரிப்பதில் பிரிவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வில் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் திககேகா பெரேரா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய பிரதேச வைத்தியசாலை சுவாச நோயாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மெத்தை ஒன்றுடன் கூடிய மருத்துவமனை கட்டில் நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும், MH-BJP வைத்தியசாலை நோயாளர்களின் அன்றாட சிகிச்சை தேவைகளுக்கு ஆதரவாக வயது வந்தோருக்கான டயப்பர்கள், படுக்கை விரிப்புகள் மற்றும் சீரம்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு சிரேஷ்ட அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.