28th January 2026 09:00:45 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினால், 2026 ஜனவரி 23 அன்று படையணி தலைமையகத்தில் மனநலம் குறித்து விரிவுரை ஏற்பாடு செய்யப்பட்டது. சொற்பொழிவை மருத்துவ உளவியலாளர் திருமதி விஷ்மிகா டி சில்வா நடத்தினார்.
இந்த அமர்வில் உணர்ச்சி ரீதியான மீள்தன்மை, மன அழுத்த முகாமைத்துவம், வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் இராணுவ வாழ்க்கைக்கு ஏற்றவாறு ஆரோக்கியமான சமாளிக்கும் உத்திகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட படையினர் நேரடியாகவும், இணையவழியில் பங்கேற்று, தகவல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் ஈடுபட்டனர்.