16th January 2026 10:41:37 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதைர் பிரிவு, கண்ணாடி நன்கொடை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 2026 ஜனவரி 09 ஆம் திகதி படையணி தலைமையக விரிவுரை மண்டபத்தில் நடாத்தியது.
இந்த நிகழ்ச்சியின் போது, இலங்கை இராணுவ பொது சேவை படையணி பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சுமார் ரூ.1 மில்லியன் பெறுமதியான 100 ஜோடி உயர்தர கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இது அவர்களின் நலனுக்காக பலத்த ஆதரவை வழங்கியது.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதைர் பிரிவின் தலைவி திருமதி நயோமணி டி சில்வா, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதைர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.