09th January 2026 14:51:56 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு, பொல்ஹெங்கொட இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை 2026 ஜனவரி 04 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை இராணுவ செயலாளரும், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பி.ஜீ.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. இரோஷினி பெர்னாண்டோ அவர்களுடன் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் போது, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி பணியாளர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு ரூ.2 மில்லியன் பெறுமதியான 200 பொதிகளில் 37 பொதிகள் அடையாளமாக வழங்கப்பட்டன.