05th January 2026 15:21:39 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு, கற்பிட்டி, தலவில, புனித பீட்டர்ஸ் கல்லூரி பிள்ளைகளுக்கு 2025 டிசம்பர் 30 ஆம் திகதி ஒரு புத்தகம் வழங்கும் நன்கொடை திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த திட்டம், அன்றாட வாழ்க்கையிலும் கல்வி நடவடிக்கைகளிலும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை ஏற்படுத்திய தித்வா சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த திட்டத்திற்கு, ரூ. 300,000.00 பெறுமதியான புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை நன்கொடையாக வழங்கிய வைத்தியர் மெலனி விஜேசூரிய அவர்களின் பங்களிப்பின் மூலம் சாத்தியமானது.
இந்த நிகழ்வில் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிஹானி அபேவர்தன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.