Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

21st December 2025 13:00:40 Hours

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினால் இராணுவ சேவை வனிதையர் பிரிவினருக்கு வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவி வழங்கல்

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினால் வெள்ள நிவாரண பணிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக உலர் உணவு பொதிகளை வழங்கும் நிகழ்வு 2025 டிசம்பர் 12 அன்று இராணுவ தலைமையகத்தில் நடத்தப்பட்டது.

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியான திருமதி சஜீவனி பண்டாரநாயக்க அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவிற்கு நாடு முழுவதும் அனர்த்த நிவாரண பணிகளுக்காக பங்களிப்பை வழங்கும் முகமாக இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த பொதிகளை வழங்கினார்.

ரூ. 300,000.00 க்கும் அதிகமான மதிப்புள்ள இந்த நன்கொடை, சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இராணுவக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் வழங்கப்பட்டது.