10th December 2025 17:38:58 Hours
கண்டி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் மனிதாபிமான நிவாரண திட்டத்தை இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி வெற்றிகரமாக நிறைவேற்றியது.
இந்த நிகழ்ச்சியில் சீரற்ற காலநிலையால் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சுமார் ரூ. 5,500,000.00 பெறுமதியான உலர் உணவு பொதிகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.