Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

19th November 2025 14:24:22 Hours

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் திஸாவெவவில் 2025 மே 24 ஆம் திகதி 3 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியில் நலன்புரி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அஜந்தா டி சில்வா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது, கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ சேவைப் படையணிகள் மற்றும் அதனுடன் இணைந்த படையணிகளின் சிப்பாய்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் முதலுதவி பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

மேலும், தேர்வுகளில் சிறந்து விளங்கிய பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.