16th November 2025 11:33:43 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவினர் 4வது இலங்கை பீரங்கி படையணியுடன் இணைந்து, 2025 நவம்பர் 11 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் ஒரு இசையுடனான சிகிச்சை நிகழ்ச்சியை நடாத்தினர்.
இந்த நிகழ்ச்சி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிடையே நேர்மறையான அணுகுமுறைகள், பரஸ்பர புரிதல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டமையப்பட்டது. இந்த அமர்வை அணுகுமுறை வளர்ச்சி மற்றும் நேர்மறை சிந்தனை விரிவுரையாளர் திரு. அஜித் ஜயசுந்தர அவர்கள் நடத்தினார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும், இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுடன் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களின் துணைவியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.