08th November 2025 19:07:21 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு, 2025 அக்டோபர் 27 ஆம் திகதி பனாகொடை படையணி தலைமையகத்தில், இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகம் மற்றும் 1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணியில் பணியாற்றும் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அஜந்தா டி சில்வா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஏ.எம் பிரேமரத்ன என்டிசி பீஎஸ்சீ எல்எஸ்சீ, இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.