07th November 2025 06:41:15 Hours
விஷேட படையணி சேவை வனிதையரின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வை முன்னிட்டு, குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் 2025 ஒக்டோபர் 26 அன்று தொடர் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
பங்கேற்பாளர்கள் உடல் மற்றும் மன உறுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர், அதே நேரத்தில் சாகச நடவடிக்கைகள் குழு உருவாக்கம், தலைமைத்துவ முன்னேற்றம் மற்றும் விடாமுயற்சியின் உணர்வுகளை வளர்ப்பதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மகாலேகம், விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.