Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

17th October 2025 16:01:14 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையரால் சிறுவர் தின கொண்டாட்டம்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஒக்டோபர் 12 ஆம் திகதி பொல்ஹெங்கொட இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் சிறுவர் தின நிகழ்வை கொண்டாடியது.

இலங்கை இராணுவச் செயலாளரும், இலங்கை இராணுவ பொலிஸ் படையிணின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. இரோஷினி பெர்னாண்டோ அவர்களுடன் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் காலை உணவு, போட்டிகள், வேடிக்கையான செயல்பாடுகள் மற்றும் இசை பொழுதுபோக்கு ஆகியவை இடம்பெற்றன. மதிய உணவின் பின்னர் சிறுவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அவர்களது பிள்ளைகளுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.