Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

14th October 2025 14:36:14 Hours

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையரால் உலக சிறுவர் தின கொண்டாட்டம்

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 ஒக்டோபர் 04 அன்று குருநாகல் படையணி தலைமையகத்தில் உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வு இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி உறுப்பினர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை வழங்கியது. அன்றைய நிகழ்வில் பொழுதுபோக்கு விளையாட்டுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு வேடிக்கையான நிகழ்வுகள் இடம்பெற்றன. சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பரிசில்களும் சிறப்பு மதிய உணவும் வழங்கப்பட்டது. மேலும், தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதை பிரிவினரால் பெற்றோர்களுக்கு தேங்காய், பால் மா பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி குமாரி பல்லேகும்புர, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.