Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th October 2025 14:22:03 Hours

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையரால் உதவித்தொகை வழங்கும் திட்டம்

உலக சிறுவர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஒக்டோபர் 03 ஆம் திகதி கரந்தெனிய இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நடாத்தியது.

இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.என். மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இல்மா மஜீத் அவர்களுடன் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளில் சிறந்து விளங்கிய 30 மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் கலந்து கொண்டனர்.