13th October 2025 07:08:49 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவு, தொடம்கஸ்லந்த, உடத்தபொலவில் பொம்பாடியர் ஆர்.டி.எச்.கே. விஜேரத்ன அவர்களுக்கான புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தது. நிர்மானிக்கப்பட்ட புதிய வீடு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க ஆகியோரால் 2025 செப்டம்பர் 28 ஆம் திகதி பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
இந்தத் திட்டம், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும், இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.