11th October 2025 13:20:07 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி நயோமணி டி சில்வா அவர்கள் 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் எம்.கே.எஸ்.எஸ். டி சில்வா, இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.