09th October 2025 14:10:37 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஒக்டோபர் 04 அன்று பிலியந்தலை விஷேட தேவையுடைய பிள்ளைகள் கிராமத்தில் சிறுவர்தின நிகழ்வு நடத்தப்பட்டது.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரதி தளபதியும், இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேகேஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் வேடிக்கையான செயல்பாடுகள், போட்டிகள் மற்றும் சிறுவர்களுக்கு பரிசுப் பொதிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், பிள்ளைகளின் நலனுக்காக ரூ. 30,000.00 பெறுமதியான விளையாட்டுப் பொருட்கள் விஷேட தேவையுடைய பிள்ளைகள் கிராமத்திற்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.