03rd October 2025 14:33:43 Hours
இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவு, 2025 ஆம் ஆண்டு உலக சிறுவர் தினத்தை இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எச்.ஜீ. சுவர்ணலதா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ முன்னோடி படையணி மற்றும் இலங்கை ரைபில் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பிள்ளைகளின் பங்கேற்புடன் பல்லேகலை "ரைபிள் சேலட்" விடுமறை விடுதியில் 2025 ஒக்டோபர் 01 ஆம் திகதி கொண்டாடியது.
நிகழ்ச்சியின் போது சிறுவர்களுக்கு பாடசாலை பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் பின்னர் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.