02nd October 2025 15:39:42 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினரால் மின்னேரியா இராணுவத் தள மருத்துவமனையில், இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இல்மா மஜீத்தின் வழிகாட்டுதலின் கீழ், 2025 செப்டம்பர் 25, அன்று இரத்த தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 120க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் தாமாக முன்வந்து இரத்த தானம் வழங்கினர்.
இந்த நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டிஎன் மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.