02nd October 2025 15:42:57 Hours
கொமண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு, கம்புருபிட்டியில் உள்ள அபிமன்சல II இன் போர் வீரர்களை 2025 செப்டம்பர் 14, அன்று கனேமுல்ல படையணி தலைமையகத்தில் வரவேற்றது.
வருகை தந்த போர்வீரர்களை கொமண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்கிரமரத்ன அவர்கள் வரவேற்றார். இந்நிகழ்வின் போது, போர்வீரர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன், அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளும் வழங்கப்பட்டன. கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.