Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

25th September 2025 13:55:01 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையரினால் நன்கொடை வழங்கல்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2025 செப்டம்பர் 20 அன்று இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி இரோஷினி பெர்னாண்டோ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது, புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்கு பண உதவி வழங்கப்பட்டதுடன் முதுகெலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட இலங்கை இராணுவ பொலிஸ் படையணி பணியாளர் ஒருவரின் சகோதரருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.