Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

16th September 2025 14:20:45 Hours

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினர் ராகமை இலங்கை சிறுவர் மேம்பாட்டு மையத்தின் பிள்ளைகளுக்கு 2025 செப்டம்பர் 11, அன்று நன்கொடை வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிராணி விஜேகோன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த திட்டத்தில் 22 பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன், மதிய உணவு மற்றும் பொழுதுபோக்கு அமர்வுகளுடன் நிகழ்வு நிறைவடைந்தது. இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.