07th September 2025 17:38:01 Hours
இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவு, 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய போர் வீரனின் பிள்ளைக்கு மடிக்கணினி வாங்குவதற்கான வவுச்சரை 2025 ஆகஸ்ட் 31 ஆம் திகதி 2 வது முன்னோடி படையணியில் நன்கொடையாக வழங்கியது.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எச்.ஜி சுவர்ணலதா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.