07th September 2025 17:54:52 Hours
இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2025 ஆகஸ்ட் 30 அன்று அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தில் முதியோருக்கான மாதாந்த தான நிகழ்வை நடாத்தினர். இந்த திட்டம் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இல்மா மஜீத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி தனுஜா சுபசிங்க அவர்கள் நிதியுதவி வழங்கினார்.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.