04th September 2025 10:18:59 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவு, இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஆகஸ்ட் 30 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை நடாத்தியது.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதித் தளபதியும், இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜே.கே.ஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 5 பேர், க.பொ.த (சா/த) பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்ற 7 பேர் மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற 5 பேர் உட்பட 17 மாணவர்களுக்கு ரூ.300,000.00 பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.