01st September 2025 16:48:37 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 ஆகஸ்ட் 30 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் நன்கொடை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரோஷினி பெர்னாண்டோ இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்ட நான்கு இராணுவ பொலிஸ் பணியாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி வழங்கப்பட்டது. ஒவ்வொரு பயனாளிக்கும் பால்மா, ஊட்டச்சத்து உணவுகள், தனிப்பட்ட சுகாதாரப் பொருட்கள், தினசரி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறப்பாகத் தனிப்பயனாக்கப்பட்ட ஒரு ஜோடி காலணிகள் அடங்கிய ஒரு பொதி வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.