29th August 2025 14:37:28 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் பிரதித் தலைவி திருமதி ஷியாமா ஹெட்டிகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி படையணி தலைமையக கேட்போர் கூடத்தில், தனிப்பட்ட பங்களிப்புகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர்.
இந்த திட்டத்தின் மூலம், சேவையில் உள்ள அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் தற்பொழுது மருத்துவ சவால்களை எதிர்கொள்ளும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 25 நபர்கள் பயனடைந்தனர். நிகழ்வின் போது, 17 சக்கர நாற்காலிகள், 2 கொமோட் சக்கர நாற்காலிகள், 6 முழங்கை ஊன்றுகோல்கள் மற்றும் 1 நடைக்கருவி ஆகியவை பயனாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.