25th July 2025 12:00:16 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு, அதன் நலன்புரி திட்டங்களில் ஈடுபட்டுள்ள சிப்பாய்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் வூரத்திற்கான டி-சர்ட்களை வடிவமைத்து வழங்குகிறது.
இந்த டி-சர்ட்கள் 2025 ஜூலை 22 ஆம் திகதி பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட கள விஜயத்தின் போது வழங்கப்பட்டன.
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.