07th July 2025 15:25:12 Hours
சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கீழ் இயங்கும் நலன்புரி நிறுவனங்களில் பணியாற்றும் படையினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியை 2025 ஜூலை 04 ஆம் திகதி முல்லேரியாவ சூரியகாந்தி கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இதன் போது அவர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுடன் இணைந்து, படையினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி படையினருக்கு உரையாற்றினார். உரையின் போது அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளைப் பாராட்டியதுடன், நலன்புரி விடயங்களுக்கான அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். கலிப்சோ இசை குழுவினரின் இசையினால் நிகழ்ச்சி மேலும் சிறப்புற்றது.
நிகழ்வின் ஒரு பகுதியாக, எலையன்ஸ் நிதி நிறுவனத்தின் அனுசரணையில் மாங்கன்றுகள் படையினருக்கு விநியோகிக்கப்பட்டன.