Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

26th June 2025 12:46:52 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையரால் பல்நோக்கு நலன்புரி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டல்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினர் பொல்ஹென்கொட இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் முன்மொழியப்பட்ட பல்நோக்கு நலன்புரி வளாகத்திற்கான அடிக்கல் 2025 ஜூன் 22 அன்று நாட்டினர்.

இந் நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். வருகை தந்த இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியை இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெரேரா மற்றும் உறுப்பினர்கள் வரவேற்றனர்.

வருகை தந்த இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியை இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெரேரா மற்றும் உறுப்பினர்கள் வரவேற்றனர்.

சுப நேரத்தில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்கள் பல்நோக்கு நலன்புரி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி தேவையுடைய இரண்டு இராணுவ பொலிஸ் படையணி படையினருக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினார். பின்னர், அவர் இராணுவ பொலிஸ் படையணியில் உள்ள 58 ஊழியர்களுக்கு பயனளிக்கும் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இரண்டு இராணுவ பொலிஸ் படையணி சிவில் ஊழியருக்கு பரிசு வவுச்சரை வழங்கினார்.

மேலும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவிக்கு அத்தியாவசிய தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினார்.

இலங்கை இராணுவத்தின் இராணுவச் செயலாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் யூ.எல்.ஜே.எஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.