Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

15th June 2025 10:17:25 Hours

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையரால் பால் தேநீர் மற்றும் ஐஸ்கிரீம் தானம்

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜூன் 10 ஆம் திகதி பனாகொடை போதிராஜராமய விகாரைக்கு அருகில் பால் தேநீர் மற்றும் ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது.

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.