04th June 2025 12:05:17 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 மே 31 ஆம் திகதி இலங்கை சிங்க படையணியின் இரண்டு அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சியில் நான்கு மாதத்திற்கு போதுமான பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்திற்கு இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினால் ரூ. 200,000 ஒதுக்கப்பட்டது.