29th May 2025 12:27:20 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கெமுனு ஹேவா படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான ஓய்வெடுத்தல் நுட்பங்களில் தேர்ச்சி பெறுவது குறித்த பட்டறை 2025 மே 24 ஆம் திகதி நடாத்தப்பட்டது.
பங்கேற்பாளர்களிடையே மன நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம் பயிற்சி செய்தல் மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவற்றின் பயன்பாடு குறித்து கவனம் செலுத்தியது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு. ஒஷாதா பெரேரா அவர்கள் இந்தப் பட்டறையை நடாத்தினார்.