28th May 2025 17:14:12 Hours
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நளின் பண்டாரநாயக்க யூஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டத்தக்க சமூக நலத் திட்டம் 2025 மே 22 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் இரத்தமாற்று நிலையத்துடன் இணைந்து, படையணியின் சல்யூட் வரவேற்பு மண்டபத்தில் இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முயற்சி, தேசிய சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதையும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட, சேவை வனிதையர் பிரிவினால் தொடங்கப்பட்ட பரந்த அளவிலான சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் உறுப்பினர்கள், விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், பொதுமக்கள் உட்பட சுமார் 200 பேர் இரத்த தானம் வழங்க முன்வந்தனர்.
5 வது மற்றும் 3 வது (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணிகளுடன், சேவை வனிதையர் பிரிவு இணைந்து இத்திட்டத்தை ஒருங்கிணைத்தது.