Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

25th May 2025 15:10:29 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் இரண்டாம் காலாண்டிற்கான பொதுக்கூட்டம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 2025 மே மாதத்திற்கான மாதாந்த பொதுக்கூட்டம் 2025.05.23 ஆம் திகதி மதியம் இராணுவ தலைமையகத்தில் உள்ள கட்டிட எண் 07, முதல் மாடியில் உள்ள பல்லூடக மண்டபத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் தலைமையில் நடைபெற்றது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாதாந்த பொதுக் கூட்டத்தில், படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்து படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவிகளும் பங்கேற்றனர். மாதாந்த பொதுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, மனித வள முகாமை மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டு ஆலோசகர் திருமதி சுரனி வெத்தசிங்க, சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களின் சார்பாக ஒரு உரையை நிகழ்த்தினார்.

உரையினை தொடர்ந்து, அனைவரும் ஒன்றாக சேவை வனிதையர் கீதத்தை பாடினர். மேலும் வீரமரணமடைந்த போர் வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவு மற்றும் படையணி சேவை வனிதையர் பிரிவுகளின் நலன் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறித்த சிறிய ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர், கூட்டம் நிகழ்ச்சி நிரலின்படி ஆரம்பமாகியது. பின்னர் தலைவி கூட்டத்தில் உரையாற்றினார் மற்றும் அமைப்பின் படி நிர்வாகக் குழுவின் வெற்றிடங்களில் உள்ள பதவிக்கு பின்வரும் சிரேஷ்ட உறுப்பினரை நியமித்தார்.

துணைச் செயலாளர் - திருமதி. லிலந்தி தொலகே

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, கூட்டத்தில் உரையாற்றுகையில், பிரிவின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து கூட்டத்திற்குத் தெரிவித்ததோடு, கௌரவ ஜனாதிபதியின் தற்போதைய தூய இலங்கை திட்டத்திற்கு ஏற்ப அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தேவையற்ற செலவுகளைக் குறைத்து, அவற்றை இராணுவ வீரர்களின் நலனுக்காக மட்டுமே செலவிடுமாறு படையணி சேவை வனிதையர் பிரிவுகளின் தலைவியர்களுக்கு மேலும் அறிவுறுத்தினார்.

அதன் பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிர்வாகச் செயலாளர், இலங்கை இராணுவ மகளிர் படையணியின் மேஜர் சீ.டி. ஜோசப், சென்ற கூட்டத்தின் அறிக்கையை சமர்ப்பித்தார். மேலும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் மேஜர் பீ.ஜீ.பீ.சீ. குமாரி சமர்ப்பித்தார். அதன் பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, போர் வீரர்களின் நலனுக்காக நடாத்தப்படும் புதிய நலத்திட்டங்கள் மற்றும் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்களை திறம்பட பராமரிப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற நன்கொடை நிகழ்ச்சியில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டு சேவை வனிதையர் பிரிவின் தலைவியுடன் இணைந்து போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக நன்கொடைகளை வழங்கினார். அதன்படி, 02 போர் வீரர்களுக்கு 02 புதிய வீட்டுக்கு தலா ரூ.600,000.00 நிதியுதவியும், 06 போர் வீரர்களுக்கு 06 அரை வீட்டுக்கு தலா ரூ.450,000.00 நிதியுதவியும், சேவையிலுள்ள சிவில் ஊழியருக்கு ரூ.350,000.00 மதிப்புள்ள 01 புதிய வீட்டுக்கான நிதியுதவியும், சேவையிலுள்ள மூன்று சிவில் ஊழியர்களுக்கு ரூ.300,000.00 மதிப்புள்ள 03 அரை வீட்டுக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டன.

மேலும், இராணுவத்தில் கடமையாற்றும் ஒரு சிவில் ஊழியரின் நோய்வாய்ப்பட்ட பிள்ளைக்கு ஒரு லட்சம் ரூபாய் (ரூ.100,000.00) மருத்துவ நிதியும், மூன்று வீரர்களின் பிள்ளைகளுக்கு பால் மா பகட்கள்/சுகாதாரப் பொருட்களுக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் (ரூ.100,000.00) நிதியுதவியும் வழங்கப்பட்டன. இதேபோல், சென்ற மாதாந்த பொதுக் கூட்டங்களில் புதிய வீட்டு நிதியுதவியின் முதல் கட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்ற மூன்று போர் வீரர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் (ரூ. 200,000.00) மதிப்புள்ள மூன்று புதிய வீட்டுக்கான நிதியுதவியும், பகுதியலவு கட்டப்பட்ட வீட்டு நிதியுதவியின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இரண்டு போர் வீரர்களுக்கு தலா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் (ரூ. 150,000.00) நிதியுதவியும் வழங்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் 135 கர்ப்பிணி வீராங்கனைகளுக்கு தங்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் 30 கர்ப்பிணி வீராங்கனைகளுக்கு அடையாளமாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இறுதியாக, மாதாந்த பொதுக்கூட்டத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் அனைவரும் தேசிய கீதம் பாடினர். தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர், கர்ப்பிணிப் வீராங்கனைகள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.