23rd May 2025 20:49:52 Hours
இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலந்தி விஜேசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில், 2025 மே 21 அன்று மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது.
முதலாம் படை தளபதியும் இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரியா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த முயற்சியின் மூலம், 150 இராணுவ புலனாய்வு படையணி பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கரந்தெனிய பிரதேச மக்களுக்கு முழு உடல் பரிசோதனைகள், சிறப்பு பரிந்துரைகள் மற்றும் சரியான மருந்துகளை விநியோகித்தல் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. பலபிட்டி அடிப்படை மருத்துவமனையின் மருத்துவக் குழுவின் ஆதரவுடன், தொற்றுநோயற்ற நோய்கள் மற்றும் வெற்றிலை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் தொடர்பாக பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.