18th May 2025 07:44:40 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் கொண்டைக்கடலை அவியல் மற்றும் பலாக்காய் அவியல் தானம் 2025 மே 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இராணுவ தலைமையகத்தில் உள்ள வெசாக் வலயத்திற்கு அருகில் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரதித் தலைவி திருமதி பிரியங்கா விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதற்கு இணையாக, இராணுவ சேவை வனிதையர் பிரிவு, பொண்டெரா பிராண்ட்ஸ் லங்கா (தனியார்) நிறுவனத்துடன் இணைந்து, பௌத்தலோக மாவத்தை வெசாக் வலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் 10,000 க்கும் மேற்பட்ட பால் தேநீர் தானம் வழங்கியது.மேலும், கங்காராமய வெசாக் வலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக இதேபோன்று பால் தேநீர் தானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.