17th May 2025 21:54:22 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு, 2025 மே 09 அன்று இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தில், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அப்சரா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உலர் உணவு விநியோகம் மற்றும் நிதியுதவி நன்கொடை திட்டத்தை நடாத்தியது.
இந்த நிகழ்ச்சியின் போது, 32 சிவில் ஊழியர்களுக்கு கொழும்பில் உள்ள இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பட்டறையின் நிதியுதவியுடன், தலா ரூ.7,000.00 மதிப்புள்ள உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. மேலும், ஜப்பானில் நடந்த சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்ற, அதிகாரவாணையற்ற அதிகாரியின் மகள் மிஸ் நேதுமினி உமாஷா ரத்சரணிக்கு ரூ.150,000.00 நிதியுவியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.