18th May 2025 07:44:15 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு, 2025 மே 13 அன்று இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு முன்னால், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மரவள்ளிக்கிழங்கு, பலாக்காய்,, கொண்டைக்கடலை அவியல் மற்றும் பால் தேனீர் தானம் என்பவற்றை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை இராணுவத்தின் இராணுவச் செயலாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யூ.எல்.ஜே.எஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பக்தர்கள் தானம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.