17th May 2025 09:22:42 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அப்சரா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 மே 12 ஆம் திகதி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையக பிரதான நுழைவாயிலில் கொண்டைக்கடலை அவியல் தானம் வழங்கப்பட்டது.
இந்த தொண்டு நிகழ்வில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.