16th May 2025 10:36:46 Hours
காலி 'விரு கெகுலு' பாலர் பாடசாலையின் பிள்ளைகள் 2025 மே 09 அன்று காலி 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணி மைதானத்தில் நடைபெற்ற வருடாந்த விளையாட்டுப் போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். காலி விரு கெகுலு பாலர் பாடசாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட உறுப்பினர் திருமதி அஜந்தா டி சில்வா இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பிரதம விருந்தினரை பிள்ளைகள் அன்புடன் வரவேற்றனர். மேலும் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
பாலர் பாடசாலையின் அனைத்து பிள்ளைகளும் இசை நிகழ்ச்சி, அணிநடை கண்காட்சி, அஞ்சல் ஓட்டம், தடை தாண்டல் விளையாட்டு, துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு, சமையல் விளையாட்டு, மரங்களை பாதுகாப்போம், ஹாக்கி விளையாட்டு, வளையல் விளையாட்டு, கம்பளிப்பூச்சி விளையாட்டு, நண்டு பந்தயம், கடற்கரை விளையாட்டு, மீன்பிடி விளையாட்டு மற்றும் மணல் கோட்டை உருவாக்குதல் விளையாட்டு போன்ற பல்வேறு விளையாட்டு மற்றும் வேடிக்கையான நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
பரிசளிப்பு விழாவுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. வண்ணமயமான நிகழ்வைக் காண சிரேஷ்ட அதிகாரிகள், சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.