Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

16th May 2025 10:54:40 Hours

இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையரினால் ஐஸ்கிரீம் தானம்

இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் வெசாக் போயா தினத்தை முன்னிட்டு, 2025 மே 12 அன்று பனாகொடை போதிராஜாராம விகாரைக்கு முன்பாக, இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மதுவந்தி அம்பன்பொல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ சேவை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் போது, பக்தர்களிடையே 10,000 க்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.