15th May 2025 15:29:24 Hours
தலைமன்னார் செல்வரி கிராமத்தில், 11வது இலங்கை பீரங்கி படையணி படையினரால், இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் நிதியுதவியுடன் ஒரு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
இந்த புதிய வீடு, 2025 மே 10, அன்று, இலங்கை இராணுவ பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன மற்றும் இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ ஆகியோர்களால் பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.